திருச்சியில், பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தையும், பணத்தைச் சேமிக்கும் நன்னடத்தைப் பேணுவிக்கும் நோக்கிலும் 40 மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு உண்டியல்கள் வழங்கப்பட்டன.
மாணவர்கள், தங்களுக்குக் கிடைக்கும் சிறு தொகைகளை உண்டியலில் சேமித்து, புத்தகக் கண்காட்சிகளில் புத்தகங்கள் வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதற்கு மாணவர்கள் உறுதியளித்தனர்.
இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர் தமிழ்செல்வி இளங்கோ 'சுத்தம் - சுகாதாரம்' உறுதிமொழியை மாணவர்களிடம் ஏற்படுத்தினர். இறுதியாக, யோகா துணை பேராசிரியர் சுமதி தர்மன், மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் அடிப்படை யோகா பயிற்சி அளித்தார்.