பொன்முடி, கௌதம சிகாமணியிடம் 100 கேள்விகள் கேட்க அமலாக்கத்துறை திட்டம்..!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (18:44 IST)
அமைச்சர் பொன்முடி, மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணியிடம் 100 கேள்விகளை கேட்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இன்று மாலை பொன்முடி, மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகிய இருவரும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ள நிலையில் அவர்களிடம் கேட்க 100 கேள்விகளை அமலாக்கத்துறை தயார் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
செம்மண் குவாரி தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீசாரிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஆம், இல்லை என பதிலளிக்கும் வகையில் கேள்விகளை தயார் செய்து இருவரிடமும் அமலாக்கத்துறை தனித்தனியாகவும் இணைந்தும் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த விசாரணை இன்னும் சில நிமிடங்களில் முடிந்துவிடும் என்றும் அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்