’நாங்க இப்படித்தான் போட்டியிடுவோம்’ - பிரேமலதா

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2016 (23:24 IST)
நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக முரசு சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 

 
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி திருப்பூர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக திருப்பூர் நடுவர் நீதிமன்றத்தில் பிரேமலதா இன்று காலை ஆஜரானார். 
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார். உள்ளாட்சித் தேர்தலில் முரசு சின்னத்தில் தேமுதிக போட்டியிடும்’ என்றார்.
அடுத்த கட்டுரையில்