தீபாவளி விடுமுறையை தொடர்ந்து காட்டாங்குளத்தூர், மறைமலைநகர் மற்றும் பொத்தேரி ரயில் நிலையங்களிலிருந்து, கூடுதலாக புறநகர் இரயில்கள் இயக்கப்படவுள்ளன.
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு சென்னை திரும்புவோர், நெரிசலற்ற பயணத்திற்காக கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓஎம்ஆர் வழித்தடங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளின் வசதிக்காக, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து 2,092 சிறப்புப் பேருந்துகள், அக்டோபர் 16, 2025 முதல் அக்டோபர் 19, 2025 வரை இயக்கப்படவுள்ளன.