அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பாவா: இது தினகரன் குசும்பு!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (12:12 IST)
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று தனது சித்தியும் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளருமான சசிகலாவை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சந்தித்து பேசினார்.


 
 
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து, குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்தது குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் குறித்தும் பதிலளித்தார்.
 
தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள அமைச்சர்கள் தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பதாக அறிவித்துள்ளனர். அதே போல இரு அணிகளும் இணைந்த பின்னர் அவர்கள் சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக் அறிவித்தால் என கேள்வி எழுப்பினார் நிரூபர். அதற்கு பதில் அளித்த தினகரன் கிண்டலாக அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பாவா? அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்றார்.
அடுத்த கட்டுரையில்