கலாஷேத்ரா மாணவிகள் தொடர்ந்த வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (14:57 IST)
கலா சேர்த்தரா கல்லூரி மாணவிகள் பேராசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் இது குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கலாசத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் விவகாரம் குறித்து உள்முக விசாரணை குழுவை மாற்றி அமைக்க கோரி மாணவிகள் தொடர்ந்து வழக்கில் சென்னை நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 
 
இந்த உத்தரவில் கலாஷேத்ரா அறக்கட்டளை கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடவடிக்கை தேவை என்றும் விரிவான கொள்கையை உருவாக்க கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு உயர்நீதிமன்ற உத்தரவிட்டு உள்ளது.
 
மேலும் பெற்றோர் மாணவர் பிரதிநிதிகள் அடங்கிய உள்முக விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்றும் பாலியல் தொல்லை தொடர்பான வழக்கை காவல்துறை தொடர்ந்து விசாரிக்கலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்