3 மாவட்டங்களில் சில மணி நேரங்களில் கனமழை

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (08:34 IST)
இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்திலுள்ள 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
 
தமிழகத்தின் மழை நிலவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது அறிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் அரியலூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இன்று ஈரோடு, நாமக்கல், சேலம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்