தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை!

திங்கள், 20 செப்டம்பர் 2021 (13:01 IST)
தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதன்படி டெல்டா மாவட்டங்களில் 24 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும். சேலம், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும் சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்