தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஞாயிறு, 26 ஜூன் 2022 (16:05 IST)
தமிழகத்தில் ஜூன் 30-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேற்கு திசை காற்றின் வேகம் காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு அதாவது ஜூன் 30-ஆம் தேதி வரை தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் ஜூன் 26 முதல் 28 வரை குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதி, தென்‌ தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தென்மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌  பலத்த காற்று வீசும் என்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்