இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்னையில் இடியுடன் மழை: வானிலை அறிவிப்பு!

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (07:40 IST)
இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
 
கடந்த சில நாட்களாக பகலில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் மாலை மற்றும் இரவில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று காலையிலேயே மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்