கமல்ஹாசனை விட்டுவிடுங்கள், என் மீது வழக்கு போடுங்கள்: சாருஹாசன்

செவ்வாய், 21 நவம்பர் 2017 (07:19 IST)
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே ஆளும் கட்சிக்கு எதிராகவும், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராகவும் கருத்துக்கள் கூறி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அவரது ஆவேசம் அதிகமாகியுள்ளது.





இந்த நிலையில் அவர் மீது தமிழகத்திலும், தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களிலும் வழக்குகள் பதிவாகி கொண்டு வருகின்றன. ஜெயகுமார் உள்ளிட்ட அமைச்சர் கமல் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் ஒரு வேண்டுகோளை ஆட்சியாளர்களுக்கு முன்வைத்துள்ளார். இந்த ஆட்சி தொடுக்கும் வழக்குகளை சந்திக்க தாம் தயாராக இருப்பதாகவும், எனவே  கமல்ஹாசனை விட்டு விடுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கமல் இதற்கு என்ன சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்