நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு..

Arun Prasath

செவ்வாய், 31 டிசம்பர் 2019 (15:15 IST)
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக தமிழறிஞர் நெல்லை கண்ணன் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து நெல்லையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய நெல்லை கண்ணன் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து சர்ச்சையாக பேசினார். இதனை தொடர்ந்து நெல்லை கண்ணன் மீது, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக சார்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்