தனித்து போட்டி: பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர்!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (07:45 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக தொகுதி உடன்பாட்டில் சமரசம் ஏற்படாததால் தனித்து போட்டியிடுவது என அறிவித்தது
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்த இந்த அறிவிப்பு பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இதன் ஒரு வகையாக தனித்துப் போட்டி என்று அறிவிப்பு வெளியானதை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் பாஜகவினர் இதனை கொண்டாடினர்
 
குறிப்பாக கரூர் பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் தனித்துப் போட்டி என்று அறிவிப்பு வெளியானவுடன் பட்டாசு வெடித்து கொண்டாடியது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
தனித்து போட்டியிடும் பாஜக எந்த அளவுக்கு தேர்தலில் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்