சசிகலா குடும்பத்தில் 10க்கும் மேற்பட்டோர் கைது? - களம் இறங்கும் சிபிஐ,அமலாக்கத்துறை

செவ்வாய், 14 நவம்பர் 2017 (14:09 IST)
சசிகலா குடும்பத்தை குறி வைத்து நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனை தான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சசிகலா குடும்பத்தை மத்திய அரசு உடும்பு பிடியாக பிடித்துவிட்டது, இனிமேல் சும்மா விடாது என பரவலாக பேச்சு உள்ளது.


 
 
சசிகலா குடும்பத்தை சேர்ந்த திவாகரன், தினகரன், விவேக், கிருஷ்ணப்ரியா, சிவகுமார் உள்ளிட்ட பலரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையிட்டு பல ஆவணங்களை கைப்பற்றியது. இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்டதாக பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தவாறு உள்ளது.
 
இந்நிலையில் சசிகலாவின் தம்பி திவாகரன், இளவரசியின் மகன் விவேக், அவரது சகோதரி கிருஷ்ணப்ரியா உட்பட சசிகலா குடும்பத்தை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டவர்களை சட்டவிரோத பணப் பரிமாற்றம் வழக்கில் கைது செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும். அதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அமலாக்கத்துறையையும், சிபிஐயையும் களமிறக்க மத்திய அரசு திட்டமிடுகிறது என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்