31ஆம் தேதி கட்சி அறிவிப்பு இல்லை: ரஜினியை டிஸ்சார்ஜ் செய்த மருத்துவர்களின் நிபந்தனைகள்!

ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (16:01 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 25ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருந்ததால் அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டன 
 
இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியான நிலையில் சற்று முன் அவரது உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்றை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது
 
இந்த அறிக்கையில் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது ரத்த அழுத்தம் சரியான நிலையில் இருப்பதாகவும் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் அவர் ஒரு வாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
 
ஒருவாரத்திற்கு ஓய்வு மற்றும் ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா தொற்று ஏற்படும் சூழல்களிலிருந்து ரஜினிகாந்த் அவர்கள் விலகி இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் 
 
மருத்துவர்களின் இந்த இரண்டு அறிவுறுத்தல் காரணமாக வரும் 31-ஆம் தேதி ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்து அறிவிப்பை வெளியிட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்