மத்திய ரெயில்வே பகுதியில் உள்ள அம்பர்நாத் - பத்லாப்பூர் நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதியில் புதிதாக கல்யாண் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள மேம்பாலம் ஒன்று அகற்றப்பட இருப்பதால், அப்பகுதியில் மின்தடை செய்யப்பட இருப்பதால், ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து நாளை (9-ந்தேதி) காலை 6.35 மணிக்கு மும்பை புறப்படும் சி.எஸ்.டி. அதிவிரைவு ரெயில் (வண்டி எண் 22158) மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. அதாவது, லோனாவாலா, கர்ஜாத், மற்றும் தானே வழியாக திருப்பி விடப்படுகிறது.