நீட் தேர்வில் மேலும் 6 பேர் ஆள்மாறாட்டம்.. போலீஸ் விசாரணை

Arun Prasath

வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (13:30 IST)
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் கைதான நிலையில், தற்போது தமிழகத்தில் மேலும் 6 பேர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக விசாரணை நடந்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்பவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்த விவகாரத்தில் நேற்று முந்திய நாள் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் உதித் சூர்யாவின் தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் இரண்டு மாணவர்கள், நீட் மாறாட்ட விவகாரத்தில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையில் அவர்களில் ஒரு மாணவர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை என தீர்ப்பு வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 6 மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்ததுள்ளது. மேலும் அதில் இரண்டு பேர் தோல்வி அடைந்துவிட்டதாகவும், மீதி 4 பேர் மருத்துவம் பயின்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், தற்போது கைதாகியுள்ள உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனின் நண்பர் மகனும் அந்த 4 பேரில் ஒருவர் என்று வெளியாகியுள்ள தகவல் தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்