பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (13:41 IST)
தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
ஹரியானாவில் 18 முதல் 59 வயது வரையிலான அனைவருக்கும் கரோனா தொற்றைத் தடுப்பதற்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மாநில அரசின் செலவில் இலவசமாக செலுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதே அறிவிப்பை டெல்லி அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
 
தமிழகத்திலும் கரோனா பரவலைத் தடுக்க 60 வயதுக்கு உட்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கடந்த 11-ஆம் தேதி தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்திருந்தேன். அது உடனடியாக ஏற்கப்பட வேண்டும். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் விகிதம் சற்று அதிகரித்து வருகிறது. அடுத்த சில மாதங்களில் நான்காவது அலை தொடங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
 
60 வயதுக்குட்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்படுகிறது; ரூ.375 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏழைகளால் இவ்வளவு கட்டணம் செலுத்துவது சாத்தியமல்ல. அதனால் அனைவருக்கும் தமிழக அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்