ஆள்கடத்தல் வழக்கு: அதிமுக மாநில நிர்வாகி டி.ஆர்.அன்பழகன் கைது

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (18:09 IST)
ஆள் கடத்தல் வழக்கில் அதிமுக நிர்வாகி டி.ஆர்.அன்பழகன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கல்குவாரியில் பணிபுரிந்த இரண்டு இளைஞர்களை கடத்தியதாக தர்மபுரி மாவட்டம் வல்லம் என்ற பகுதியைச் சேர்ந்த அதிமுக விவசாய பிரிவு மாநில தலைவர் டி.ஆர்.அன்பழகன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் டிஆர் அன்பழகன் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக மகேந்திரன் மற்றும் முருகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் என்பதும் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
 
ஆள் கடத்தல் வழக்கில் அதிமுக நிர்வாகி டி.ஆர்.அன்பழகன் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்