கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

Senthil Velan

திங்கள், 1 ஜூலை 2024 (13:31 IST)
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைதான 11  பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது தமிழக அரசு. 

ஆனால் இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
இதனிடையே, சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

தலைமைச் செயலாளர், மத்திய, மாநில பழங்குடியினர் நலத்துறை, டிஜிபி எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து டிஜிபி மற்றும் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ALSO READ: நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!
 
இந்நிலையில்  கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைதான கன்னுக்குட்டி என்கின்ற கோவிந்தராஜ் மனைவி விஜயா சகோதரர் தாமோதரன் மற்றும் சின்னதுரை ஜோசப் ராஜா சிவக்குமார் மாதேஷ் உள்ளிட்ட 11 பேரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி தரப்பில் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால்  3 நாட்கள் சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்