ஆசிரியையின் உல்லாச மோகம்!!! 16 வயது மாணவனிடம் அத்துமீறல்: மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

வியாழன், 28 மார்ச் 2019 (09:45 IST)
மதுரையில் ஆசிரியை ஒருவர் 16 வயது மாணவனிடம் அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆசிரியை ஒருவர் 16 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 4 நாட்கள் பொறுத்து பொறுத்து பார்த்த மாணவன், ஆசிரியையின் தொல்லை அதிகரிக்கவே இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தான்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் அந்த ஆசிரியையின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்