16 வயது சிறுவர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளான 7 வயது சிறுமி!

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2016 (16:25 IST)
மூன்றாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு இரண்டு 16 வயது சிறுவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்தது சேலம் மாவட்டம் சூரமங்கலம் கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சேலம், சூரமங்கலத்தில் பெற்றோருடன் வசித்து வரும் 7 வயது சிறுமி ஒருவர் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும்போது அழுது கொண்டே வந்துள்ளார்.
 
இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரிக்க அந்த பகுதியை சேர்ந்த இரண்டு 16 வயது மாணவர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட சிறுவர்கள் மீது அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
இதனையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்