விளையாடிக் கொண்டிருந்த 5ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்

Webdunia
புதன், 22 ஜூன் 2016 (16:27 IST)
தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த 5ஆம் வகுப்பு பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 

 
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை நாட்களில் வீதியில் சக பிள்ளைகளுடன் விளையாடுவது சகஜம்.
 
அதே போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
அதோடு நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி அனுப்பியுள்ளார். ஆனால், சிறுமியின் நடவடிக்கையை கவனித்த சிறுமியின் தாயார், அவரிடம் விசாரித்துள்ளார்.
 
அப்போது சிறுமி நடந்தவற்றை தனது தாயாரிடம் கூறியுள்ளார். பின்னர், அச்சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பெயரில் தா.பழுர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்