அக்னிபாத் திட்டம்: விமானப்படைக்கு இன்று எழுத்துத்தேர்வு.

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2022 (14:38 IST)
சமீபத்தில் மத்திய அரசு அக்னிபாத் என்ற ராணுவ வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டதால்ல் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்
 
மேலும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் பெரும் போராட்டம் நடந்தது என்பதும் இந்த போராட்டத்தில் ஒரு சில ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் மத்தியில் அக்னிபாட் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது ஏராளமான இளைஞர்கள் இந்தத் திட்டத்தில் இணைய விண்ணப்பம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு இன்று எழுத்து தேர்வு நடைபெற்று வருகிறது. எழுத்துத்தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் தோல்கள் மூலம் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேலும் தேர்வு நடைபெறும் பகுதிக்கு ரயில்கள் மற்றும் பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்