நாடாளுமன்றத்தில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் என்னென்ன?

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (18:24 IST)
இந்திய நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி இன்று இருவர் நுழைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம். 
 
நாடாளுமன்றத்தில் மற்றும் நான்கு கட்ட உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளது. நாடாளுமன்றத்திற்குள் செல்ல பார்வையாளர்களிடம் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம். 
 
நாடாளுமன்ற கட்டிடத்தில் நுழையும் உறுப்பினர் மெட்டல் டிடெக்டர் சோதனை புகைப்பட பதிவு ஸ்கேனிங் உள்ளிட்ட சோதனைகளுக்கு பிறகு செல்ல முடியும். 
 
எம்பி ஒருவரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட அனுமதி தரப்படும். 
 
ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே பாஸ் வழங்கப்படும். 
 
இவ்வாறான பாதுகாப்பு இருந்த நிலையில் இந்த பாதுகாப்பையும் மீறி எப்படி இருவர் உள்ளே நுழைந்தனர் என்பது மிகப்பெரிய  கேள்வி குறியாக உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்