பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவர், ஓணம் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற சிறப்பு கலை நிகழ்ச்சியில் உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்தார். சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அவர் நடனமாடியபோது, திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதை கண்ட சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.