ஏற்கனவே 4 கைதிகள் கொரோனாவால் பலி; அச்சம் தெரிவித்து திகார் சிறை கடிதம்!

வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (15:15 IST)
நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் திகார் சிறை கைதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து சிறை நிர்வாகம் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 3.50 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் திகார் சிறையையும் விட்டு வைக்கவில்லை. திகார் சிறையில் உள்ள கைதிகள் 4 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

இந்நிலையில் திகாரில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து அரசுக்கு கடிதம் எழுதியுள்ள சிறை நிர்வாகம் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு விசாரணை கைதிகள் மற்றும் குற்றவாளிகளை பரோலில் அனுப்புவது குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்