நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick

புதன், 3 ஜூலை 2024 (10:25 IST)
கேரளாவில் சிறுமி ஒருவர் நூடுல்ஸ் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் சோஜன். இவருக்கு ஜினா என்ற மனைவியும், ஜோவானா என்ற 8 வயது மகளும் உள்ளனர். ஜோவானா அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

நேற்று முன் தினம் ஜோவானா தனது வீட்டில் தயாரித்த நூடுல்ஸை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தொண்டையில் நூடுல்ஸ் சிக்கிக் கொண்டதில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் மயக்கமடைந்த ஜோவானாவை அவரது பெற்றோர் மீட்டு அடிமாலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இடுக்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து அடிமாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்