இனி ட்ரோன்கள் மூலம் தான் டெலிவரி: ஸ்விக்கி அதிரடி முடிவு

Webdunia
புதன், 4 மே 2022 (15:20 IST)
இந்தியாவில் உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனமான ஸ்விக்கி இனி ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது 
 
இதற்காக சென்னையில் உள்ள கருடா ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்துடன் ஸ்விக்கி நிறுவனம் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் முதல் கட்டமாக டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய இரண்டு நகரங்களில் சோதனை முயற்சியாக ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்ய முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது 
 
வெளிநாடுகளில் போல் நேரடியாக ஆர்டர் செய்யும் இடத்திற்கே ட்ரோன்கள் செல்லாது என்றும் ஒரு குறிப்பிட்ட பகுதி வரை ட்ரோன்கள் செல்லும் என்றும் அங்கிருந்து ஸ்விக்கியின் தொழிலாளர்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு டெலிவரி செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நேரடியாக ஆர்டர் செய்தவருக்கு ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யப்படும் என்றும் ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்