சோனியா காந்தியை கைது செய்ய தயாரா?: நரேந்திர மோடிக்கு கெஜ்ரிவால் சவால்

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (11:09 IST)
ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை செய்ய தயாரா? என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.


 

 
ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது குற்றம் சாட்டு எழுந்தது.
 
இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது "டுவிட்டர்" கருத்து தெரிவித்துள்ளார்.
 
அதில், "ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்தியையும், இத்தாலி நீதிமன்றம் கூறியுள்ள காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்து விசாரணை நடத்த தயாரா என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் சவால் விடுக்கிறேன்.
 
பாஜக ஒருபோதும் இதை செய்யாது. ஏனென்றால், அந்த கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே ஆழ்ந்த புரிந்துணர்வு நிலவுகிறது.
 
அடுத்த 5 ஆண்டுகளுக்கு வெறுமனே பேசிக்கொண்டிருக்குமே தவிர, நடவடிக்கை எடுக்காது" இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்