வெள்ளத்தால் கரைந்த மொத்த உப்பு.. ஒரு கிலோ ரூ.145க்கு விற்பனை.. அண்டை நாட்டுக்கு கைகொடுத்த இந்தியா..!

Siva

திங்கள், 26 மே 2025 (08:59 IST)
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் உப்பளங்கள் அனைத்தும் சேதமடைந்து வெள்ள நீரில் மொத்த உப்பும் கரைந்து போனதை எடுத்து ஒரு கிலோ  உப்பு இலங்கையில் கடந்த சில நாட்களாக ரூ.145க்கு விற்பனை ஆகி வருகிறது.
 
இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அரிசியைவிட உப்பு விலை அதிகம் என்ற நிலையில் இந்தியா இலங்கைக்கு கை கொடுத்து உதவி செய்துள்ளது. இலங்கை கடலோரங்களில் சேமிக்கப்பட்ட உப்பு அனைத்தும் கனமழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை அடுத்து இலங்கைக்கு இந்தியா 3050 மெட்ரிக் டன் உப்பை கப்பல் மூலம் அனுப்பியுள்ளது. இது இலங்கைக்கு செய்த சரியான உதவியாக பார்க்கப்படுகிறது.
 
சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது இலங்கை வெளிப்படையாக இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தது என்பதும் அதற்கு பிரதிபலனாக இலங்கைக்கு தற்போது இந்தியா உதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த 350 மெட்ரிக் இலங்கை போய் சேர்ந்ததும் இலங்கையில் உப்பின் விலை இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி எதிர்காலத்தில் உப்பிட்ட இந்தியாவுக்கு இலங்கை நன்றியுடன் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்