இலங்கை தமிழர் ஒருவர், கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சட்ட விரோதமாக வருகை தந்ததாக கைது செய்யப்பட்டார். அவருக்கு 2010 ஆம் ஆண்டு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
விசாரணை நடைபெறும் போது, நீதிபதி கூறியதாவது: "இந்தியாவில் 140 கோடி மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், மற்ற நாடுகளின் மக்களையும் அனுமதிக்க இது ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது."
இந்த நிலையில், தற்போது அவர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டால், அங்கு கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக வாய்ப்புள்ளது என அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.
அதற்கு பதிலளித்த நீதிபதி, " இலங்கையில் உயிருக்கு ஆபத்து என்றால், வேறு ஏதாவது நாட்டுக்கு போக சொல்லுங்கள்," என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.