முத்துச்செல்வன் அளித்த வாக்குமூலத்தில், "இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரங்கள் குறித்து புத்தகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன். இலங்கை தமிழர்களின் இறப்புக்கு பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அந்த நோக்கத்தில் கருணாநிதி நினைவிடத்தில் மண்ணெண்ணெய் குண்டு வீச தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்தேன்" என தெரிவித்துள்ளார்.
அத்துடன், முத்துச்செல்வன் முன்னுக்குப் பின் முரணான பதில்கள் அளித்ததாகவும், அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே, அவரை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.