வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, அசாமில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, தன் மீதான தனிப்பட்ட தாக்குதல்களுக்கும், அவதூறுகளுக்கும் பதிலடி கொடுத்தார். "என் மீது அவதூறு பரப்பினால், அந்த விஷத்தை நான் விழுங்குவேன், ஏனெனில் நான் சிவ பக்தன்" என்று அவர் உணர்ச்சிபூர்வமாக குறிப்பிட்டார்.
அசாமில் வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்த பிறகு பேசிய மோடி, "மோடி மீண்டும் அழுகிறார் என்று காங்கிரஸ் கூறலாம், ஆனால் மக்கள் தான் என் கடவுள். அவர்கள் என் முன் தங்கள் வலியை வெளிப்படுத்தவில்லை என்றால் நான் எங்கு செல்வேன்? அவர்கள் தான் எனது குரு, எனது கடவுள், எல்லாமே" என்று தெரிவித்தார்.