விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி; 8வது தவணையை விடுவிக்கும் பிரதமர்!

வெள்ளி, 14 மே 2021 (09:12 IST)
இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகலுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் 8வது தவணைக்கான தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஏழை விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 என்ற கணக்கில் தவணை முறையில் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தின் 8வது தவணையை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். இதன்படி சுமார் 9.5 கோடி விவசாய குடும்பங்களுக்கு ரூ.19,000 கோடி நிதியுதவி நேரடி வங்கி கணக்கில் வரவு செய்யப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்