பொதுமக்களின் அத்தியாவசிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டை, வங்கி சேவைகள், அரசு நலத்திட்டங்கள் உட்பட பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சூழலில், 7 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கான ஆதார் பயோமெட்ரி தகவல்களை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.