சைடஸ் கெடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்

சனி, 21 ஆகஸ்ட் 2021 (09:21 IST)
இந்தியாவில் சைடஸ் கெடிலா என்ற நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா உலகத்தையே முடக்கியுள்ள நிலையில் இதுவரை இரண்டு அலைகள் பரவி பல லட்சக் கணக்கான மக்களை கொன்று குவித்துள்ளது. 20 கோடி பேர்களுக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க உலக நாடுகள் தடுப்பூசிகளை போட்டு வருகின்றன.
 
இந்தியாவில் இப்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு ஊசிகளும் போடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் சைடஸ் கெடிலா என்ற நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தலாம் என மருத்து தரக்கட்டுப்பாடு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்