இந்தியாவின் சைகோவ் டி - உலகின் முதல் டி.என்.ஏ கொரோனா தடுப்பூசி

சனி, 21 ஆகஸ்ட் 2021 (00:02 IST)
இந்தியாவின் சைடஸ் கெடிலா என்கிற மருந்து நிறுவனம், டி.என்.ஏ அடிப்படையாகக் கொண்டு தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு, இன்று, இந்தியாவின் பொது மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டி.சி.ஜி.ஐ) அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
 
உலகிலேயே சைகோவ் டி தான் டி.என்.ஏ மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த கொரோனா தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தலாம் என இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஏ.என்.ஐ முகமையிடம் கூறியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்