மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்.. உடன் வந்த நண்பர் தான் காரணமா?

Siva

புதன், 15 அக்டோபர் 2025 (11:02 IST)
மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிக்கு அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
 
ஒடிசாவை சேர்ந்த இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவி, அவரது நண்பருடன் அக்டோபர் 10 அன்று கல்லூரி வளாகத்திலிருந்து வெளியே வந்தபோது, சிலரால் வழிமறிக்கப்பட்டு வனப்பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டார்.
 
இந்தச் சம்பவம் குறித்து பேசிய காவல் ஆணையர் சுனில் குமார் சவுத்ரி, இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவரிடமிருந்து பறிக்கப்பட்ட கைப்பேசி மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், காவல்துறை விசாரணையில் மாணவி ஒரு நபரால் மட்டுமே வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
 
மாணவியின் நண்பரின் பங்கு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது அல்ல என்று காவல்துறை அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தது. அதனை தொடர்ந்து, அன்றைய தினமே அந்த நண்பரும் கைது செய்யப்பட்டார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்