மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளுக்கு தடை - கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு

வியாழன், 10 பிப்ரவரி 2022 (17:37 IST)
மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை அணிய மாணவர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்ததை அடுத்து அந்த மாணவிகள் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட வில்லை 
 
இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்து வருகிறது 
 
இந்த விசாரணையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது, இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்