கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அதிகாரப்பூர்வ வாகனமான டொயோட்டா ஃபார்ச்சூனர் கார், கடந்த ஜனவரி 2024 முதல் ஏழு முறை போக்குவரத்து விதிகளை மீறியுள்ளது. பெங்களூரு நகரின் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு மூலம் இந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ஏழு விதிமீறல்களில், ஆறு வழக்குகள் முன்பக்க இருக்கையில் சீட் பெல்ட் அணியாதது தொடர்பானது. ஒரு வழக்கு அதிவேகமாக சென்றது தொடர்பானது. இது கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் ஜூலை மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.