ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிறுவனர் கைது: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..!

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2023 (10:06 IST)
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் என்பவர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்தியாவின் முன்னணி ஏர்வேஸ் நிறுவனங்களில் ஒன்றான ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் ஏர்வேஸ் என்பவர் கனரா வங்கியில் ரூபாய் 538 கோடி கடன் பெற்றார். 
 
ஜெட் ஏர்வேஸ் வளர்ச்சிக்காக இந்த கடன் பெற்றதாக கூறப்பட்ட நிலையில் இந்த பணத்தை அவர்  வேறு சில நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.  
 
இந்த நிலையில் இதனை கண்டுபிடித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் பண மோசடி தொடர்பான வழக்கில் அவரை கைது செய்தனர். இதனை அடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் விசாரணையில் எடுக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் கைது செய்யப்பட்ட தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்