சீமான் நிச்சயமாக கைது செய்யப்படுவார்: தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி

வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (16:35 IST)
நடிகை விஜயலட்சுமி வழக்கில் சீமான் நிச்சயம் கைது செய்யப்படுவார் என தமிழர் முன்னேற்றப்பட தலைவர் வீரலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
 
நடிகை விஜயலட்சுமி மற்றும் சீமான் ஆகிய இருவரும் மதுரையில் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்தார்கள் என்றும் ஆனால்  விஜயலட்சுமியை ஏமாற்றிவிட்டு சீமான் வேறொரு திருமணம் செய்து கொண்டார் என்றும் இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் வீரலட்சுமி தெரிவித்தார்.  
 
சீமான் தான் பொது வாழ்வில் இருப்பவர், அரசியல்வாதி என்ற போர்வையில் தான் செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது என்றும்   அவர் கைது செய்யப்படுவது உறுதி என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சி தலைவர்கள் கூட பேசவில்லை என்றும் ஆண்கள்   வர்க்கத்தினர் யாருமே அவருக்கு ஆதரவு தரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஆனால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை கண்டு அவருக்காக நான் ஆதரவு தந்துள்ளேன் என்றும் கண்டிப்பாக சீமானுக்கு தண்டனை வாங்கி தரும் வரை விடமாட்டேன் என்றும் அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்