இஸ்ரோவின் புதிய சாதனை: விண்ணில் 22 செயற்கைகோள்கள்

Webdunia
ஞாயிறு, 29 மே 2016 (00:25 IST)
இஸ்ரோ, ஒரே ஏவுகனையில் 22 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைக்க திட்டமிட்டுள்ளது.


 

 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஓரிரு மாதத்தில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வர்த்தக ரீதியாக 22 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. இதில் 18 செயற்கைகோள்கள் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்ததாகும். 
 
இதுவரை ஒரே ராக்கெட் மூலம் 10 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்த இஸ்ரோ, இந்த முறை 22 செயற்கைகோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி, அந்த சாதனையை முறியடிப்பதுடன் மேலும் புதிய சாதனை படைக்க திட்டமிட்டுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்