இது குறித்து தகவல் அறிந்த இந்தியக் கடலோரக் காவல்படை மீட்புப் பணிகளில் இறங்கியது. ஐ.சி.ஜி.எஸ். என்ற மீட்புக் கப்பலின் உதவியுடன், அமெரிக்க கப்பலையும் அதில் பயணம் செய்த இரண்டு பேரையும் மீட்கும் பணியில் இறங்கியது.
பலத்த காற்று மற்றும் தொழில்நுட்பப் பிரச்சனை இருந்தபோதிலும், அமெரிக்க கப்பலை இந்திய கடலோரக் காவல்படையினர் துறைமுகத்திற்கு வெற்றிகரமாக கொண்டு வந்தனர். நடுக்கடலில் அமெரிக்க கப்பல் சிக்கிய இரண்டே நாட்களில் இந்திய கடலோரக் காவல்படை எந்தவித சேதமும் இல்லாமல் துறைமுகத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து, இந்திய கடலோரக் காவல்படையினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.