அகமதாபாத் விமான விபத்து: 10 நிமிடங்கள் தாமதத்தால் விமானத்தை மிஸ் செய்த பயணி.. உறவினர்கள் மகிழ்ச்சி..!

Mahendran

வியாழன், 12 ஜூன் 2025 (17:17 IST)
அகமதாபாத் விமான விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த விமானத்தை பத்து நிமிட தாமதத்தால் தவறவிட்ட பயணி ஒருவரும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் கிளம்பிய ஒரே நிமிடத்தில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான நிலையில், இந்த விபத்து காரணமாக இதுவரை 130 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விமானத்தில் மொத்தம் 242 பேர் பயணம் செய்த நிலையில், அவர்களில் ஏழு பேர் குழந்தைகள் என்றும், அந்த ஏழு பேர்களில் இரண்டு குழந்தைகள் சில நாட்களுக்கு முன்புதான் பிறந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், மீட்புப் படையினர் விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், 130 உடல்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில், இந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த பூமி சவுகான் என்பவர் 10 நிமிடம் தாமதமாக விமான நிலையத்திற்கு வந்ததால் அவர் இந்த விமானத்தை தவறவிட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இவர் விமானத்தை தவறவிட்டதால் வருத்தம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் தற்போது இந்த விபத்திலிருந்து தப்பித்துள்ளார் என்பதை அறிந்து அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்