இந்த சூழலில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு எச்ஐவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்கும்போது, 3 வடமாநிலத் தொழிலாளர்கள் உட்பட மேலும் 9 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
அனைவரும் ஒரே போதை ஊசியைப் பயன்படுத்தியதால் நோய்த்தொற்று பரவியிருக்கலாம் என மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து மேலாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.