தென்மேற்கு பருவமழை, புதிய வீரியத்துடன் கனமழை பெய்யும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

திங்கள், 17 ஜூலை 2023 (09:23 IST)
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் புதிய வீரியத்துடன் மேலும் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் இந்த வாரம் பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவின் வட மாநிலங்களில் வழக்கத்தை விட அதிகமாக கனமழை கொட்டியதால்  பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் வரும் வாரத்திலும் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தென்மேற்கு பருவமழை காலம் புதிய வீரியத்துடன் இந்த வாரம் மேலும் கன மழையை கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்