இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் செம மழை! – வானிலை ஆய்வு மையம்!

வியாழன், 13 ஜூலை 2023 (09:25 IST)
தென்மேற்கு பருவமழை சீசன் நடந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக குஜராத் தொடங்கி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம் ஆகிய வட மாநிலங்கள் பலவற்றிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று அருணாச்சல பிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அதி கனமழையும், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரை அடுத்த ஒரு வார காலத்திற்கு மிதமான மழை தொடர்ந்து பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பான்மையான நீர்த்தேக்கங்கள் மழை காரணமாக அதன் முழுக் கொள்ளளவை எட்டி வருகின்றன.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்