நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி! – டெல்லியில் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (15:18 IST)
டெல்லி கீழமை நீதிமன்றத்தில் திடீரென நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கீழமை நீதிமன்றத்தில் வழக்கம்போல அலுவல் பணிகள் நடந்து வந்த நிலையில் நீதிபதி அறை 217க்கு முன் திடீரென ரவுடிகள் சிலர் துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ரவுடி ஜிதேந்தர் உட்பட 4 பேர் பலியான நிலையில் மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். இரு ரவுடி கும்பல்கள் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிசூடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்